World Tamil Blog Aggregator Thendral: மனம் சுடும் தோட்டாக்கள் கவிதை நூல் வெளியீட்டு விழா

Thursday 17 August 2017

மனம் சுடும் தோட்டாக்கள் கவிதை நூல் வெளியீட்டு விழா



அன்புடன் அழைக்கின்றோம்

கவிதை நூல்கள் வெளியீட்டு விழா...

நாள் 19.8.17 சனிக்கிழமை
காலம் மாலை 5 மணி
இடம் தமிழ் சங்கம் பாண்டிச்சேரி
தலைமை கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள்

கடற்கரை
மணல்வெளியில்
கவிதைகளை
விதைத்து விட்டு
கலைந்திடத்தான்
முதலில் திட்டம்..

புதுகைக்கும்
புதுவைக்கும்
பூர்வீக சொந்தம்
உண்டோ?
தங்க மனசுகள்
எம் கவிதைகளை
சங்கத்தில் வைத்து
ஆராதிக்கப் போகின்றன..

அப்பன் பாரதி
அவன் தாசன்
குரல்கள்
கேட்டிருந்த
குயில் தோப்பின்
மிக அருகில்..

முக்கவிஞர்
முத்தெடுத்த
கவிதைகளை
உங்கள்
அகம் சேர்க்க
ஆவலுடன்
அன்பின் விழா!!

அருமைப் பெரியோரே!
அன்புநிறை தோழர்களே!!

புதுவை
தமிழ்ச்சங்க வாசலிலே.

காத்திருப்போம்
கவிதைகளோடு
நாங்களும்.

வந்து சேருங்கள்...

10 comments :

  1. வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
  2. விழா சிறக்க மனம் நிறைந்த வாழ்த்துகள். தங்களின் எழுத்துப்பணி தொடரட்டும்.

    ReplyDelete
  3. வாழ்த்துகள்..

    ReplyDelete
  4. வாழ்த்துகள் அம்மா

    ReplyDelete
  5. வாழ்த்துகள் தங்கையே! -நாளை
    வந்திடுவேன் முந்தியே!

    ReplyDelete
  6. வாழவத்துகள்!த ம 4

    ReplyDelete
  7. வாழ்த்துகள!த ம 4

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...