World Tamil Blog Aggregator Thendral: கந்தர்வன் நூலக விழா

Friday 8 May 2015

கந்தர்வன் நூலக விழா

கந்தர்வன் நூலக விழாவில் வாசித்த கவிதை-

தலைப்பு-கார்ல் மார்க்ஸ்
------------------------------------------------------------
உலகின் தலை சிறந்த காதலுக்கான
இலக்கண நூலாய் மார்க்ஸ்-ஜென்னி காதல்

உலகின் தலை சிறந்த குடும்ப
வாழ்க்கை நூலாய் மார்க்ஸ்-ஜென்னி வாழ்வு

உயிரணைய ஜென்னியை கூட
புத்தக வாசிப்பில் மறந்து திளைத்தவரை

கந்தர்வன் நூலகத் திறப்பு விழாவிற்கு
கனிவுடன் அழைத்தேன்

மார்க்ஸை சந்திக்க வரிசையில்
தமிழகத்தலைவர்கள்.....

ஏழைத்தொழிலாளின் அண்மையையே
நாடினார் அவர்...

ஒரு வார்த்தை ஒரு சம்மதம் பெற
அத்தனைக் கட்சிகளும் ஆவலுடன்

வலதுடன் இடது சேர விரும்பி
வாய்ப்பை நாடி வாசலில்
வாலாட்டியபடி....

பெட்டியைக்காட்டி இளித்தது ஒன்று

மார்க்ஸை டாஸ்மார்க்கில்
கவிழ்ப்பேன் என ஆர்ப்பரித்து ஒன்று

உன்னதக்காதலை உலகுக்கு
உணர்த்தியரை உடலழகியிடம்
சிக்க வைக்கத் துடித்தது மற்றொன்று

பெற்ற குழந்தைக்கு தொட்டிலும்
செத்த குழந்தைக்கு சவப்பெட்டியும்
வாங்க இயலாத நாட்களிலும்
வறுமையில் வாடியோருக்காக
வாழ்நாளைக் கழித்தவர் அவர்

உழைக்காத,உழைப்பை நேசிக்காத
ஊழலில் உழன்று
உண்டு களித்து வீழ்வோரைக்
காணவிரும்பாது காற்றில்
கரைந்தார் வியர்வையின் தோழர்

9 comments :

  1. Replies
    1. மிக்க நன்றி சகோ

      Delete
  2. இனிய கவிதை, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி அய்யா

      Delete
  3. வணக்கம்
    அருமையான வரிகள் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ

      Delete
  4. சிறப்பான கவிதை! பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ

      Delete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...