World Tamil Blog Aggregator Thendral: வெற்றிகள் விற்பனைக்கு அல்ல-முனைவர் சங்கரராமன்

Monday 5 January 2015

வெற்றிகள் விற்பனைக்கு அல்ல-முனைவர் சங்கரராமன்

”வெற்றிகள் விற்பனைக்கு அல்ல”-முனைவர் சங்கரராமன்

விஜயா பதிப்பகம் 20,ராஜவீதி,கோயம்புத்தூர்.விலை ரூ 45/

ஒரு நூல் வாசித்ததும் நம் மனதில் ஏதேனும் ஒரு மாற்றத்தை நிகழ்த்தும் போது அந்நூலாசிரியர் வெற்றியடைகின்றார் ..

வசீகரமான எழுத்தாற்றலால்...மகிழ்வையும், சோகத்தையும், தன்னுள் கொண்ட நூல்கள் வரிசையில்..மனதில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் நூலாய் இந்நூல் அமைந்து மனதில் இடம் பிடிக்கின்றது...

கருத்து பெட்டகமாய் அமையும் தன்னம்பிக்கை நூல்களின் வரிசையில்..இயல்பாய் நம்முடன் அமர்ந்து கையைப்பிடித்துக்கொண்டு வெற்றியை நோக்கி நம்மை அழைத்துச்செல்கின்றது..

எடுத்த உடனே “நிராகரிப்பை நிராகரியுங்கள்” என்ற தலைப்பே சாட்டையடியாய் நம்மை உறுத்துபவைகளைத் துடைத்தெறிகின்றது...
    
                    ”  நீங்கள் பிறந்தது
                 உங்கள் பிறந்த நாள் அல்ல
          உங்களுக்குள் இருக்கும் திறமைகள்
          என்று பிறந்ததோ அதுவே
             உங்கள் பிறந்த நாள்”
எனக்கூறும் வரிகள் நாம் எப்போது பிறந்தோம் அல்லது எப்போது இனி பிறப்போம் என்ற வினாவை நமக்குள் சுழல விட்டு சுய அலசலை உருவாக்குகின்றது...அருமை...தம்பி.

14 தலைப்புகளில் அருமையாக உண்மைச்சம்பவங்களைக் கதைகளாகக் கூறி மனதை பக்குவப்படுத்தி தோழமையோடு வெற்றியின் படிக்கட்டில் அமர வைக்கும் முயற்சியில் எழுத்தாளரும் தம்பியுமான சங்கரராமன் வெற்றி பெறுகின்றார்.
கல்லூரியில் ஆசிரியராகப்பணி புரிந்து கொண்டே தன்னம்பிக்கை சொற்பொழிவுகளால் மாணவர்களின் வெற்றிக்கு வழி காட்டும் ஆசிரியராக பேச்சாளராக அடையாளம் கொண்டவர்..இந்நூல் மூலம் சிறந்த எழுத்தாளராகவும் மனதில் இடம் பிடிக்கின்றார்..ஒவ்வொரு ஆசிரியர் மற்றும் மாணவர்கள் கைகளிலும் மட்டுமல்ல அனைவரின் கைகளிலும் தவழ வேண்டிய நூலாக அமைந்துள்ளது
         
  ” வெற்றிகள் விற்பனைக்கு அல்ல” எனும் இந்நூல் .வாழ்த்துகள் சகோதரா மேலும் வெற்றிகள் உங்களைச்சரணடைய...



7 comments :

  1. வாங்கத் தூண்டுகிறது உங்கள் வரிகள்.

    முனைவர் சங்கரராமனுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. முனைவர் சங்கரராமனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. வணக்கம்
    வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. இம்முறை வீதிக் கூட்டத்தில் ஒரு நூல் கிடைக்கும் என்று நினைக்கிறன் ...
    த ம ++

    ReplyDelete
  5. எழுத்தாளர்களின், சில பொன்னான வார்த்தை மற்றும் வரிகளைப்பற்றி கேட்கும்போது அந்த புத்தகத்தை வாங்கவும் படிக்கவும் ஆவலை தூண்டும்வண்ணம் அமைந்திருக்கும் விமர்சகர்களின் விமர்சனங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    எழுத்தாளர்களும், பதிப்பாளர்களும் விமர்சகர்களை உற்சாகப்படுத்தி ஊக்கிவித்தால், புத்தகம் படிப்பவர்களை அதிகரிக்கச் செயலாம் .. ஆகவே சர்வதேச அளவில் பல வாசகர் மற்றும் விமர்சகர்களின் குழுக்கள், மற்றும் விமர்சகர்களின் வட்டம், விமர்சகர் மன்றம் போன்றவை உருவாகுவதற்கு உறுதுணையாக உதவி செய்தாலே போதும், ஏராளமான வாசகர்களைப் பெறமுடியும். இதற்க்கு எழுத்தாளர்களோடு, பதிப்பாளர்களும் உதவி செய்ய முன்வரவேண்டும். முதலில் உங்களுக்கு அருகாமையில் இருக்கும் பகுதிகளில் வாசகர் மன்றம் ஒன்றை அமைத்து, மாதம் ஒருமுறை வாசகர் மற்றும் விமர்சகர் கூட்டம் ஒன்றை நடத்தி, சிறந்த வாசகர் மற்றும் விமர்சகர்களுக்கு சில பரிசுப்பொருட்கள் வழங்கினால், வாசகர் மன்றம் சிறப்பாக செயல்படுவதோடு எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் நிறைய பயன்களைப் பெறலாம்.

    நன்றிகளுடன் (சிங்கை கோகி / கோபாலகிருஷ்ணன் ரேடியோ மார்கோனி)

    ReplyDelete
  6. நூல் மதிப்புரையைப் படித்தேன். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...