World Tamil Blog Aggregator Thendral: இனிய கலந்துரையாடலாக..11.10.14

Saturday 11 October 2014

இனிய கலந்துரையாடலாக..11.10.14

இனிய கலந்துரையாடலாக..11.10.14




இன்று கவிஞர் வைகைறை அவர்கள் வீட்டில் ஒரு கலந்துரையாடல் கவிஞர்கள் நாணற்காடன்,ஸ்ரீபதி,கண்மணிராசா ஆகியோருடன்,புதுகைக் கவிஞர்களான முத்துநிலவன்அய்யா,சுவாதி,செல்வா,சோலச்சி,கஸ்தூரிரங்கன் ஆகியோருடன் நானும்..இருந்தது மிகவும் மனநிறைவாய்...

நடுநடுவே ஜெய் குட்டி ஜோட்டாபீமாய் மாறி மனதைக்கவர்ந்தான்...

கலந்துரையாடலின் கருப்பொருளாய்..
                   இலக்கியம் ,இலக்கிய இதழ்கள்,புதுக்கவிதை,ஹைக்கூ,எழுத்தாளர்கள் குறித்து பேசியதும்,கந்தகப்பூக்கள் ஆசிரியர் ஸ்ரீபதியின் துணங்கைக்கூத்து கதைகளில் இருந்து யந்திர இதயம் கதை கேட்டதும்,மாலை நேரத்தை இனிமையாக்கியது...கவிதைகளால் இணைவோம் நிகழ்வில் முன் அறிமுகம் இருந்தாலும் இன்றைய சந்திப்பு கூடுதலாய் அவர்ர்களைப்பற்றி தெரிந்து கொள்ளும் வாய்ப்பாக அமைந்தது....

இக்கூட்டம் தொடர்ந்து கூடுமெனில் ஆரோக்கியமான இலக்கியக்கூட்டமாக அமையும்...மலரும் 

மனதைக்கவர்வதாக ஒரு வண்ணத்துப்பூச்சியின் வரவு கூட்டத்திற்கு அழகு சேர்த்தது...

இந்நிகழ்விற்கு ஏற்பாடு செய்த கவிஞரும்,நந்தலாலா இணைய இதழாசிரியருமான வைகறைக்கு நன்றி..

12 comments :

  1. நல்லதொரு சந்திப்பு அனுபவம்...
    பகிர்வுக்கு நன்றி சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்...சகோ..நான் இப்படி கலந்து கொள்ளும் முதல் கூட்டம்...நன்றி

      Delete
  2. ஆஹா அனைவரையும் பார்க்க மிகவும் மகிழ்வாக உள்ளது தோழி. நான் அங்கு இல்லையே வருத்தமாகவும் பொறாமையாகவும் இருக்கிறது. ஹா ஹா.
    பதிவுக்கு நன்றி ...!
    மேலும் சிறப்புகள் சேர வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா நீங்களும் இருந்தா அதை விட வேறு சிறப்பேது..நன்றிம்மா..பார்க்கின்றேன் அனுப்புக...குறை இருப்பின் சுட்டிக்காட்டுக..

      Delete
  3. ஆரம்பித்து விட்டேன்மா சாம்பிள் கொஞ்சம் அனுப்புகிறேன் பின்னர் பாருங்கள். ok வா

    ReplyDelete
  4. அருமையான சந்திப்பு நிகழ்வு!! வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
  5. உங்களையெல்லாம் ஒரு நாளில் சந்திக்கும் வாய்ப்பிற்காக காத்துக்கொண்டுள்ளேன்மா.நன்றி.

    ReplyDelete
  6. நடந்தது புதுகையில்தானே ?மீண்டும் மீண்டும் பூக்கட்டும் இனிய சந்திப்பூக்கள் )
    த ம 1

    ReplyDelete
  7. ஆஹா! மிகவும் இனியமையான சந்திப்பல்லவா?!!!!!! ம்ம்ம்ம் கொஞ்சம் செல்லமாகப் பொறாமைதான்...இப்படி, கவிஞர் அவர்களின் நூல்வெளியீட்டு விழா சந்திப்பு....இப்போது இந்தக் கலந்துரையாடல் சந்திப்பு....நண்பர் மது/கஸ்தூரி அவர்களும்.....கவிஞரும்...ம்ம்ம் அருமையான சந்திப்புதான் சகோதரி! பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  8. வணக்கம்
    சந்திப்புக்கள் தொடரட்டும் சிந்தனைகள் விரியட்டும்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. சந்திப்பு என்றாலே மகிழ்ச்சிதானே

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...