World Tamil Blog Aggregator Thendral: மகளிர் தினம்

Friday 7 March 2014

மகளிர் தினம்


 

இன்றைய  8.3.14 தினகரன் செய்தித்தாளில்......பெண்ணிய வரலாறாய்....

1789ம் ஆண்டு பிரஞ்ச் புரட்சி நடந்தபோது பெண்களும் போராட்ட களத்தில் இறங்கினர். சமத்துவ உரிமைகள் வேண்டும் என்றும் எட்டு மணி நேர  வேலை, வேலைக்கு ஏற்ற ஊதியம், பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் அடிமைகளாக நடத்தக் கூடாது என்றெல்லாம் கோரிக்கைகளை முன்வைத்து  போராடினர். அதை நசுக்க நினைத்த மன்னர் லூயிஸ் பிலீப், போராட்டத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் போராட்ட காரர்களை சமாதான  படுத்திப் பார்த்தான். ஆனால் முடியவில்லை. இதனால் தன் மன்னர் பதவியை துறந்தான்.

அதன் வெற்றி ஐரோப்பா முழுக்க பெண்கள் போராட்டம் நடத்த உத்வேகம் ஊட்டியது. ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் ஆகிய நாடுகளை சேர்ந்த  பெண்களின் தொடர் போராட்டங்களைக் கண்டு அரசு ஆடிப்போனது. இத்தாலிய பெண்கள், வாக்குரிமை கேட்டு போராடினர். பிரான்ஸில் பிரஷ்யனில்  இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங் பெண்களை அரசவை ஆலோசனை குழுக்களில் சேர்க்கவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும்  ஒப்புக்கொண்ட அந்த நாள் 1848 மார்ச் 8. அந்தநாளைத்தான் உலகம் முழுக்க பெண்கள் உரிமை தினமாக கொண்டாடுகின்றனர்.  

பெண்களின் போராட்டம் அமெரிக்காவிலும் நடைபெற்றது. 1908ம் ஆண்டு வாக்குரிமை கேட்டு பெண்கள் நடத்திய போராட்டத்தை கண்டு அமெரிக்க  ஜனாதிபதி பியோடர் ரூஸ்ரெல்ட்டே அஞ்சினார். 1910ம், ஆண்டு  ஓப்பன் ஹேகனில் கிளாரா ஜெட்கின் தலைமையில் அனைத்துலக பெண்கள்  மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் சர்வதேச மாதர் அமைப்பு உருவானது. இந்த அமைப்பின் சார்பாக 1911ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி  டென்மார்க் ஆஸ்திரியா ஜெர்மனி இன்னும் சில ஐரோப்பிய நாடுகளின் பெண் பிரதிநிதிகள் முதலாவது சர்வதேச மாதர் தினத்தைக் கொண்டாடினர்.
 இந்த கொண்டாட்டத்தின் போதுதான் மார்ச் 8ம் தேதியை சர்வதேச மாதர் தினமாக கொண்டாட வேண்டுமென்பது முடிவு செய்யப்பட்டது. சமீபகாலமாக  ஐ.நா.சபையின் பெண்கள் அமைப்பு சார்பில், மார்ச் 8ம் தேதியை சர்வதேச மாதர் தினமாக உலகெங்கும் கடைபிடிக்கின்றனர். சுமார் 226  ஆண்டுகளுக்கும் மேலாக பெண்கள் போராடிப்போராடி தங்கள் உரிமைகளை பெற்றுவருகின்றனர்”. நன்றி தினகரன் செய்தித்தாள்


இன்று மகளிர் தினம் ஒரு பக்கம் முன்னேற்றமடைந்த பெண்களின் கொண்டாட்டம்.
 ஒரு பக்கம் பெண்களின் இன்றைய உண்மையான நிலை என்ன ?என்ற ஆய்வாகவும் செய்தித்தாள்களில் காண்கிறோம்.
மகளிர் தினம் என்பது இருநூறு ஆண்டு கால போராட்டத்தின் வெற்றி.அரசியலை உருவாக்குவதில் எங்களுக்கு பங்கு வேண்டும் என போராடி ஆண்கள் வேறு வழியின்றி ஓட்டுரிமை தந்த நாள் இன்று.

இருநூறு வருடங்கள் கழிந்த பின்னும் வாழ்வதற்கான போராட்டமாகவே பெண்களின் நிலை இன்றும் உள்ளதை இன்றைய ”தினமணி” செய்தித்தாளில் தோழி இன்சுவை அவர்களின் கட்டுரை சுட்டுகிறது.
”தி இந்து” செய்திதாளில் அடித்தட்டு பெண் தொழிலாளர்களின் வாழ்வு நிலையில் மாற்றம் ஏற்படுவது எப்போது என்ற கேள்வி சமூகத்தை நோக்கிய வினாவாகத் தொடுக்கப் பட்டுள்ளது.

” ஒரு பெண்ணால் எப்போது அச்சமின்றி உலகில் வாழ முடியுமோ அப்போது தான் பெண்களுக்கு சமத்துவமும் சுதந்திரமும் கிடைத்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள முடியும் என்பதே உண்மை”.

பெண்கள் வாழ்வதற்கே போராட வேண்டிய நிலையில் இன்று எத்தனை உயிர்களை இழந்திருக்கின்றோம்.உடல் சார்ந்த போராட்டத்தில் கண்ணுக்குத் தெரிந்த நிர்பயா,அமுதா,என்ற தொடரில் இன்று உமாமகேஸ்வரி என தொடரும் நிலைக்கு எப்போது முற்றுப்புள்ளி வைக்க போகின்றோம்.

இனியாவது ஆண் ,பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வார்ப்பை மாற்றி இருவரும் சமமான மனிதர்கள் என்ற கருத்தை குழந்தைகளிடம் வேரூன்றச் செய்வோம்.

ஊடகங்களும் பெண்களை அழகிற்கான பொருளாய்க் காட்டாமல், அறிவை நோக்கி அவள் பாதை அமைப்பவளாக காட்ட முயற்சிக்கட்டும்.















3 comments :

  1. இனிய பெண்கள் தின வாழ்த்துகள் தோழரே!
    “இனியாவது ஆண் ,பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வார்ப்பை மாற்றி இருவரும் சமமான மனிதர்கள் என்ற கருத்தை குழந்தைகளிடம் வேரூன்றச் செய்வோம்.“ தங்கள் கட்டுரையில் கண்ட ஆதங்கங்கள் மறைந்து, எதிர்பார்ப்புகள் நிறைவேற “பெண்களோடு ஆண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே” நன்றி வணக்கம்.

    ReplyDelete
  2. // குழந்தைகளிடம் வேரூன்றச் செய்வோம்... //

    இதை தான் முதலில் அனைவரும் செய்ய வேண்டும்...

    சர்வதேச மகளின் தின நல்வாழ்த்துக்கள் - என்றும்...

    ReplyDelete
  3. அறிமையான பதிவு கீதா.
    //இனியாவது ஆண் ,பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வார்ப்பை மாற்றி இருவரும் சமமான மனிதர்கள் என்ற கருத்தை குழந்தைகளிடம் வேரூன்றச் செய்வோம்.// இதுதான் இன்றைக்கு ரொம்ப முக்கியம்..அனைத்து வீடுகளிலும் பின்பற்ற வேண்டியது.
    மகளிர் தின வாழ்த்துகள்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...