World Tamil Blog Aggregator Thendral: திரை விமர்சனம்

Tuesday 2 June 2020

திரை விமர்சனம்

"பொன் மகள் வந்தாள்"-திரைப்பட விமர்சனம்.
சூர்யா& ஜோதிகாவின் தயாரிப்பில் வெளிவந்துள்ளது" பொன்மகள் வந்தாள் "திரைப்படம். 
ஜோதிகா மற்றும் ஜோதிகாவின் அப்பாவாக பாக்கியராஜ்,தனது மரியாதைக்காக எதையும் செய்ய துணியும் சமூக ஆர்வலராக தியாகராஜன், அவருக்கு வக்கீலாக பார்த்திபன்....... பாதிக்கப்படும் பெண் குழந்தைகளின் பிரதிநிதியாக ஜோதிகா வாழ்ந்திருக்கிறார்.
திரைப்படங்கள் எதை கருவாக கொள்ள வேண்டும்..சமூகத்திற்கு அவற்றின் பங்கு என்ன என்பதை இந்த படம் உணர்த்தியுள்ளது.
பெண்களை விரட்டி விரட்டி காதலிப்பது, அரைகுறை ஆடையில் ஆடவிடுவது ,அவர்களை சிந்திக்க தெரியாத பொம்மைகளாக காட்டுவது,பெண்களை கேலியும் கிண்டலும் செய்வது இயல்பான ஒன்றாக காட்டிய திரைப்படங்களும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.
காலங்காலமாக பெண்கள் அனுபவிக்கும் இந்த வலிகளை உரக்க சொல்ல விடாமல் அழுத்தப்பட்டு இருந்தது தற்போது ஒலிக்கத்துவங்கி உள்ளது.உண்மையான சமூக அக்கறை உள்ளவர்களால் மட்டுமே காசுக்கு விலை போகாமல் சமூகச் சீர்கேடுகளை சாடி குரல் கொடுக்க முடியும் என்பதற்கு சூர்யா ஜோதிகா உதாரணமாக திகழ்கின்றனர்....
ஜோதிகா, மருத்துவமனையும் கோவிலாக கவனிக்கப்படவேண்டும் என்று கூறியதற்காக அவரின் மீது வீசப்பட்ட அவமானங்கள் சமூக அக்கறை உள்ளவர்கள் மீது எறியப்பட்ட கற்கள்.
சொந்த வீடே பெண்குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற போகும் கொடுமை வேறு எந்த உயிரினங்களுக்கும் இல்லை...
குட் டச்,பேட் டச் சொல்லிக் கொடுக்க வேண்டியது ஆண் குழந்தைகளுக்கு.
சொந்தங்கள் பிஞ்சு குழந்தைகளின் உடலை ஆசைக்கு பயன் படுத்தி கொள்ளும் போது அக்குழந்தைகளின் வலியை கேட்க நம்ப அவர்களின் பெற்றோர்களே தயாராக இல்லாத போது அக்குழந்தை படும் பாடு சொல்ல முடியாத கொடுமை.
சிறு குழந்தைகளுக்கு இப்படி எனில் டீன்ஏஜ் குழந்தைகளின் உணர்வுகளைத் தூண்டி பயன்படுத்திக் கொள்ளும் ஆணினம் அவர்களையே குற்றவாளிகளாக்கி மகிழ்கிறது.
குடும்பம் பெண்ணின் உணர்வுகளை சிதைத்து அதில் கட்டமைக்கப்பட்டு வாழ்கிறது.
பெண்களின் வன்முறைக்கு எதிராக எழும்பும் குரல்கள் அதிகமாகிக் கொண்டு இருந்தாலும் அறியாத சின்னஞ்சிறு பெண்குழந்தைகளை சிதைப்பதும் அதிகமாகிக் கொண்டு உள்ளது.
சாதாரணமாக கடந்து போகிறோம்.நம் வீட்டில் நடக்க வில்லை என்று நிம்மதியில்.
ஆனால் உங்கள் குழந்தைகள் தங்களின் வலிகளை சொல்ல முடியாமல் மனதிற்குள் மருகுகின்றனர்....எந்த குழந்தையும் இந்த கொடுமைகளுக்கு விதி விலக்கல்ல என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
சிதைக்கப்பட்ட பெண்குழந்தைகள் வாழ்நாள் தண்டனையாக உளவியல் நோயாளியாக தனது வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு உள்ளனர்.குற்றவாளிகளோ எந்த வித சங்கடமுமின்றி ஆண்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்ற கர்வத்துடன் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.
ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்டவராக உணர்ந்தால் தான் அவர்களின் வலியை உணர முடியும்.
பெண்களை சக மனுஷியாக மதிக்கத் தெரியாத ஆண்கள் விலங்கினும் கீழானவர்கள் என்ற உணர்வை எப்போது கற்றுத்தர போகின்றோம்.
"பொன் மகள் வந்தாள்"கொரானா காலத்தில் பெண் குழந்தைகளுக்காக எழுப்பப்பட்ட குரல்....
அதில் நடித்த ஒவ்வொருவரும் அர்ப்பணிப்புடன் நடித்து உள்ளனர்.இப்படிப்பட்ட படத்தை தயாரித்து வழங்கிய சூர்யா,ஜோதிகாவிற்கு மனம் நிறைந்த நன்றியும் வாழ்த்துக்களும்.

இதில் குறைகள் இருக்கலாம் ஆனால் தவிர்க்க முடியாத கரு ...

8 comments :

  1. சிறப்பான கண்ணோட்டம்

    ReplyDelete
  2. நல்லதொரு விமர்சனம். பாராட்டுகள்.

    ReplyDelete
  3. "பொன் மகள் வந்தாள்"கொரானா காலத்தில் பெண் குழந்தைகளுக்காக எழுப்பப்பட்ட குரல்....

    உண்மை

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அண்ணா நன்றி

      Delete
  4. விமர்சனம் நன்று. பாராட்டுகள்

    துளசிதரன்

    கீதா

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...