World Tamil Blog Aggregator Thendral: குளிச்சீங்களா?

Friday 26 February 2016

குளிச்சீங்களா?

மகாமகத்துல குளிச்சேன்னு வெளில சொல்லிடாதீங்க.. குளத்து நீரை அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ஆய்வு செய்த போது 28% மலக்கழிவும்,40%சிறுநீரும் இருந்ததாம்.... பாவத்தக்கழிக்கப்போய் நோய்க்கிருமிகளை வாங்கிக்கொண்டு வந்துள்ளார்கள்... அங்கு வேலைப்பார்த்த காவலர்களுக்கு தொற்று நோய்,தோல்நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம்... போய் குளிச்சவங்க எல்லாம் முதல்ல டெட்டால் ஊத்தி குளிச்சிட்டு ஒருமுறை டெஸ்ட் பண்ணிக்குங்கபா..

16 comments :

  1. இதனாலதான் நான் வீட்டிலேயே இருந்துட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நல்லது அப்பா.

      Delete
  2. ஹூம் காலக்கெரகம் வேறென்ன சொல்வது என்னை யாரும் குளிச்சேன்னு சொல்லவே முடியாது இல்லைனு சட்டப்படி நிரூபிக்க முடியும்.

    ReplyDelete
  3. வணக்கம்
    அருமையான விழிப்புணர்வு பகிர்வு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. இந்த ஆய்வுக்கு உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியாளர் பாராட்டுக்குரியவர் !
    அவரோட பெயர் ,படத்தையும் பதிவிலே வெளியிடுங்கள் ...உங்களுக்கு மகாமகக் குளத்தில் குளித்த புண்ணியம் கிடைக்கும் :)

    ReplyDelete
  5. அடடா....நம்ம மக்கள் இருக்காங்களே....

    ReplyDelete
  6. என்ன ஒரு கொடுமை!! கீதா, ஆனால் எனக்கு ஒன்று புரியவில்லை..தொடர்ந்து சுத்தம் செய்யும் ( (நீச்சல் குளங்களை மோட்டார் வைத்துச் சுத்திகரிப்பது போல ) ஏதேனும் முறையைப் பற்றி யோசிக்காமல் முடிந்தவுடன் ஆராய்ந்து என்ன பிரயோசனம்!!

    ReplyDelete
  7. இதை எதிர்பார்த்தோம். பலரிடம் கேட்கவும் செய்தோம்...எப்படி என்று?

    ReplyDelete
  8. அடிக்கடி தண்ணீர் மாற்றம் செய்திருப்பார்கள்தானே...

    ReplyDelete
  9. பாவத்தை கழிக்க வாங்கடா என்றால் மலத்தையும் சிறுநீரையும் கழிச்சிட்டு போய்யிருக்காங்க....இப்படிபட்ட புத்திசாலிங்கதான் வருகிற தேர்தலில் முதலமைச்சரை தேர்ந்தெடுக்கப் போறாங்க

    ReplyDelete
  10. நமது மக்கள் பக்திப் பரவசத்தில்அதையெல்லாம் கவனித்திருக்க மாட்டார்கள்
    வாழ்க நம் மக்கள்

    ReplyDelete
  11. மகாமலக் குளியல்,
    நாம ஒருத்தர் மட்டும் விட்டா யாருக்குத் தெரிஞ்சிடப் போகுதுன்னு பலபேர் பரவச நிலையில செஞ்ச சமாச்சாரம்

    ReplyDelete
  12. அடக் கொடுமையே! பல புண்ணிய ஸ்தலங்களின் குளங்களை நினைத்தால் பகீர் என்கிறது!

    ReplyDelete
  13. இது ஏற்கனவே எதிர் பார்த்ததுதான். அதனாலேதான் நான் அந்தப் பக்கம் போகவே இல்லை.
    த ம 3

    ReplyDelete
  14. இது தெரிந்துதான் நானும் அந்த ஊர் பக்கம் போகல....

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...