World Tamil Blog Aggregator Thendral: பாரதி கண்ட புதுமைப்பெண்-தடாகம் இலக்கியவட்டம்

Wednesday 25 February 2015

பாரதி கண்ட புதுமைப்பெண்-தடாகம் இலக்கியவட்டம்

முகநூலில் தடாகம் கலை இலக்கியவட்டம் நடத்தும் போட்டிக்கான என்கவிதை.
பாரதி கண்ட புதுமைப்பெண்
---------------------------------------------





நிலம் பார்க்க நடந்தவளே
விண்ணில் நடைபயின்றாள்...

இமயம் தன் காலடியிலென
இனிதே அரைக்கூவினாள்..
காலெனப்  பறக்கின்றாள்
காமுகர்களின் மத்தியில்..
கட்டிவைத்த மடமைகளை
காட்டுத்தீயாய் கருகிடச்செய்தாள்
எதையும் துணிவாய் முடிக்கின்றாள்
எள்ளியவர்களின் வாயடைத்து..
சந்ததி வளர்த்திடும் சக்தியானவள்
சரித்திரம் படைக்கவே புறப்பட்டாள்
சாத்திரத்தின் சகதியை துடைக்கவே
சங்கென முழங்கி உயர்ந்திட்டாள்
இனியவள் பாதை தெளிவாக
இனிதே புன்னகை புரிந்திட்டாள்
தன்னோடு தன்குடும்பத்தையும்
தரணிப்புகழச்செய்திட்டாள்

3 comments :

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...