World Tamil Blog Aggregator Thendral: வாழ்க்கை

Thursday, 18 December 2025

வாழ்க்கை

யாரிடமும் எதையும் எதிர்பார்க்காத
சருகைப்போல வாழ்தலரிது.
துளிர்களின் மீதான
எந்தவிதப் புகாருமற்ற வாழ்வது.
நிலம் புணர்தலைத் தவமாக
வீழ்தலில் உணரும் சருகு
மிதந்து மிதந்து வாழ்வினை
அசைப்போட்டு மெல்ல தவழ்ந்து 
நிலமுடன் கரையுமது.
 உதிரவாடையுடன்
புவியைத் தரிசிக்கும் சிசுவென.

No comments :

Post a Comment

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...