World Tamil Blog Aggregator Thendral: அசுரன்-1

Tuesday 22 October 2019

அசுரன்-1

அசுரன்-1

இளங்காலைப் பயணக்
காற்றில் கரைந்திடும்மனம்
கடிதம் எழுதேன்.
என்ன கடிதம்?
எழுத்துகள் தேடினேன்..
கவிதை எழுது வருகிறேன் என்றது.
என்ன கவிதை எழுத?
காதல்...?
கிழிச்ச...
இயற்கை?
அது அழிவின் விளிம்பில்.
தாலாட்டு?
தூங்கும் குழந்தையை எழுப்பவா?
போ...என முகம் திருப்ப சட்டென்று
மேகங்கள் உரசியதோ?
ஆயிரம் பூக்கள் நொடியில் மலர்ந்ததோ?
தேனருவி தழுவிச் செல்கிறதோ?
கொஞ்சும் நாதம் செவியில் உறைந்ததோ?
வென்பனி உருகி ஒடியதோ?
தலைசாய்த்து சிரித்த சிரிப்பில்
கலைந்து கரைந்து
குதித்தாடிய கவிதையை
என்னவென்று சொல்ல!?

1 comment :

  1. நெடுநாள் கழித்து, கண்டதில் மகிழ்ச்சி.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...