World Tamil Blog Aggregator Thendral: புதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018

Monday 15 October 2018

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018


புதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018
இரண்டு வருடங்களாக புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ் நாடு அறிவியல் இயக்கம் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் தலைமையில் புத்தகத் திருவிழாவை மிகச் சிறப்பாக நடத்தியது.
இந்த ஆண்டு நவம்பர் மாதம் 24 முதல் டிசம்பர் 3 தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.சென்ற ஆண்டு
பத்து லட்சம் பட்ஜெட்டில் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்று புத்தகங்கள் வாங்கும் வகையில் உண்டியல்கள் வழங்கி கிராமப் புற மாணவர்களும் புத்தகங்களை வாங்கி மகிழ்ந்தனர்.
சிறந்த நூல்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
ஆகச் சிறந்த பேச்சாளர்கள் சிறந்த சொற்பொழிவாற்றினார்கள்.
இந்த வருடமும் அதிக மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெறும் வகையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கோவில் திருவிழாவிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட இந்த அறிவுத்திருவிழாவிற்கு  அளிக்கும் முக்கியத்துவமே சமுதாயத்தை அறிவின் பாதையில் பயணிக்க செய்யும்.
புதுக்கோட்டை கணினி தமிழ்ச் சங்கம் மற்றும் வீதி கலை இலக்கியக் களம் சார்பில் ரூபாய் 50,000 தருவதாக உறுதி அளித்து உள்ளோம்.
ஊர்கூடித் தேரிழுக்க விரும்பும் இவ்விழாவில் உங்கள் கரங்களும் இணைய வேண்டுகிறோம்.
முதல் கரமாக தோழி தேன்மதுரத்தமிழ் கிரேஸ் அவர்கள்₹1000 நிதி அளித்து இணைந்துள்ளார்கள்....
சமுதாய மேம்பாடே நமது வருங்கால சந்ததிகளுக்கு நாம் அளிக்க வேண்டிய கடமை.
உதவும் கரங்கள் இணைந்திட
கவிஞர் முத்துநிலவன்-9443193293 மு.கீதா 9659247363.


6 comments :

  1. வாழ்த்துகள். தொடர்ந்து இவ்விழா பற்றிய தகவல்களை எழுதவும்.

    ReplyDelete
  2. புதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018 வழக்கம்போல மிகச் சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. Good article. I certainly appreciate this site. Keep writing!

    ReplyDelete
  4. I absolutely love your blog and find most of your post's to be just what I'm looking for.

    Do you offer guest writers to write content available
    for you? I wouldn't mind writing a post or elaborating on a number of
    the subjects you write with regards to here. Again, awesome web
    log!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...