World Tamil Blog Aggregator Thendral: கவிப்பேராசான் மீரா விருது 2015 விழா

Sunday 3 April 2016

கவிப்பேராசான் மீரா விருது 2015 விழா

வளரி இதழ் வழங்கிய
 கவிப்பேராசான் மீரா 2015 விருது விழா

மதுரையில் மிகச்சிறப்பாக நிகழ்ந்தது..

 என்னுடன் தாங்களே விருது பெரும் மகிழ்வோடு வீதி இலக்கிய உறவுகள் கவிஞர் முத்துநிலவன் ,கவிஞர் மகாசுந்தர்,கவிஞர் மீரா .செல்வகுமார்,கவிஞர் வைகறை,திரைப்பட பாடலாசிரியர் புதுகைப்புதல்வன்,கவிஞர் நாகநாதன்,கவிஞர் சோலச்சி,கவிஞர் நீலா,அண்ணி மல்லிகா,கவிஞர் அமிர்தாதமிழ்,குட்டி கவிஞர் எழிலோவியா,குட்டீஸ் லாவண்யா,ஆர்யா,ஆதவன்,அக்கா மங்கையர்கரசி ஆகியோர் மகிழ்வோடு கலந்து கொண்டனர்.

 எனது அழைப்பில் வலைப்பூ நண்பர்கள்.திருமிகு செந்தில்குமார்,திருமிகு பகவான் ஜி,திருமிகு மதுரைசரவணன்,திருமிகு சிவா[கலகல வகுப்பறை],வலிபோக்கன்,தமிழ்வாசிப்பிரகாஷ்..கவிஞர் ஞானசூரி சுகன்யா, 

தனது அரிதான நேரத்திலும் கலந்துகொண்டு சிறப்பித்த தோழி ஜெயா,திருமிகு எமர்சன்,. இன்னும் சிலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 விழாவில் தோழி ஆதிரா முல்லை,கவிஞர் பர்வதவர்த்தினி,கவிஞர் கூரா அம்மாசையப்பன்,ஆகியோரை நேரில் சந்தித்தது வாழ்வின் பெருமகிழ்வு.. 

கவிஞர் மீராவின் நினைவலைகளை திருமிகு தி.சு நடராசன் எங்களிடம் கடத்திய விதம் மிகச்சிறப்பு,

தலைமை வகித்த திருமிகு செல்லாவின் பேச்சு அருமையாக இருந்தது.. 

கவிஞர் முத்துநிலவன் அண்ணா தங்கைகளுக்கு கிடைத்த விருது தனக்கே கிடைத்த விருதாக உணர்கின்றேன் எனக்கூறி அகமகிழ்ந்தார்.

 வாழ்த்துரை வழங்கிய அனைவரும் நூல்கள் குறித்து அருமையாக பேசினார்கள்.
எங்கே போவேன்? கவிதையை அரங்கில் வாசித்த கவிஞர் மலர்மகள் அவர்களுக்கு நன்றி..
 கவிஞர் ஆதிரா முல்லை தனது தனித்துவ மிக்க பேச்சால் அனைவரையும் கவர்ந்தார்..
தோழி கிரஸுக்கும் சேர்த்து நான்.ஏற்புரை வழங்கிய தருணம் இனிமையானது வளரி இதழ் ஆசிரியருக்கும்,
எங்களது கவிதைகளை தேர்வு செய்த ஆசிரியர் குழுவினருக்கும்,
தங்களது மதிப்பு மிக்க காலத்தை எனக்காக ஒதுக்கி என்னுடன் வந்து கலந்து கொண்டு நிறைவான மகிழ்வை அளித்து தோழமைகளுக்கும் மனம் நிறைந்த நன்றி..

கிரேஸிடமிருந்து போட்டோக்களை சுட்டுட்டேன் நன்றிமா...







10 comments :

  1. விழா நிகழ்வுகளைப் பகிர்ந்தமையறிந்து மகிழ்ச்சி. மென்மேலும் சாதனைகளை புரிய மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. வாழ்த்துகள் சகோ! மென்மேலும் பல படைப்புகளும், அதற்கான விருதுகளும் பெற்று மகிழ எனது வாழ்த்துகள்!
    நேற்று விழாவில் கலந்து கொண்டு தங்கள் மூலமாக புதுகை பதிவர்களை மீண்டும் சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி! தங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் அந்த நாள் மறக்கமுடியாத இனிய நாள்!

    ReplyDelete
  3. விழா சிறப்பாக அமைந்தமைக்கும் தங்களுக்கு விருது கிடைத்தமைக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! மேலும் தங்களது பல படைப்புகள் வெற்றி வாகை சூடவும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. எனது வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் சகோ
    விருது பெற்றமைக்கும்
    விழா சிறந்தமைக்கும்....
    மேலும் படைப்புகள் சிறந்து
    விருதுகள் படைக்க வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  6. வளரி இதழ் வழங்கிய
    கவிப்பேராசான் மீரா 2015 விருது விழா

    மதுரையில் மிகச்சிறப்பாக நிகழ்ந்தது..
    விழாவினை காண என்னையும் பகவான்g மூலமாக அழைத்தமைக்கு நன்றியும் வணக்கங்களும்....

    ReplyDelete
  7. விழாவிலே உரையாற்றிய அய்யா முத்துநிலவன் அவர்கள் ,இணையத் தமிழ் வளர்க்கும் வலைப் பூக்களுக்கும் விருது வழங்குங்கள் என்று கோரிக்கை வைத்ததை நினைவு கூர்கிறேன் :)

    ReplyDelete
  8. மகிழ்ச்சி கீதா. படங்கள் உங்களுக்கு இல்லாததா? அதுவும் இவை அங்கிருந்து வந்தவைதானே :)

    ReplyDelete
  9. வாழ்த்துகள்
    இனி விருதுகள் வரிசை கட்டும் ..

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் சகோதரியாரே
    தவிர்க்க இயலாத காரணத்தால், கடந்த ஒரு வார காலமாக, வலையின் பக்கமே வர இயலாத நிலை. அதனால் தங்களின் சில பதிவுகளைப் பார்க்காமல் விட்டிருப்பேன் இனி தொடர்வேன்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...