World Tamil Blog Aggregator Thendral: மனவளக்கலை மூன்றாம் நிலை அகத்தாய்வு

Sunday 5 April 2015

மனவளக்கலை மூன்றாம் நிலை அகத்தாய்வு


மனவளக்கலையின் மூன்றாவது அகத்தாய்வு பயிற்சியில்

பாலாம்மா என்னை எப்படியாவது மனவளக்கலை பயிற்சி எடுக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அடிக்கடி வலியுறுத்தி கொண்டே இருந்தார்.சனி ஞாயிறு இரண்டு நாட்கள் முழுமையாக அகத்தாய்வின் மூன்றாம் நிலைப் பயிற்சி அளித்தார் தஞ்சையைச் சேர்ந்த அருள்நிதி காஞ்சிநாதன் அவர்கள்....

கலகலன்னு வகுப்பை கொண்டு சென்றார்....திருக்குறள்,பைபிள்,குர்ரான்,திருமந்திரம் ,சித்தர் பாடல் ஆகியவற்றில் மேற்கோள்களைக்காட்டி சிறப்புடன் வகுப்பு எடுத்தார்.

ஒரு மனிதன் தவறு செய்வதற்கு அவன் மட்டுமே காரணமல்ல எனும் போது அவனை மட்டுமே தண்டிப்பது முறையாகாது என்றது யோசிக்க வைத்தது.


குடும்ப அமைதி என்ற தலைப்பில் ஒரு ஆணால் பெண் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகின்றாள்...சமத்துவமான பெண்ணை ஆண் தன் வசதிக்காக எப்படியெல்லாம் கட்டுப்படுத்தி வைத்துள்ளான் என்ற போது நல்ல விசயம இருக்கேன்னு சிந்திக்க வைத்தது.

பாலியல் அறிவின்மையே எல்லா சிக்கல்களுக்கும் காரணம் என்றும் அதைப்பற்றிய தெளிவு இருந்தால் சமுதாயம் சீர்படும் ...என்ற போது அட சரிதானே ..என்றது மனம் .

பெரியாரைப்பற்றி புத்தரைப்பற்றி ...நியூட்டன் ,ஐன்ஸ்டீன்.பற்றி பேசி வேதாத்ரி அவர்களின் சிந்தனைகளைக் கூறிய போது இன்னும் முழுமையாகத்தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் பிறந்தது...

3 comments :

  1. அருள்நிதி காஞ்சிநாதன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
  3. பயனுள்ள பயிற்சி. முகநூலிலும் பார்த்ததாக நினைவு.

    களப்பணியில் நாட்டாணி சென்ற அனுபவத்தைக் காண அழைக்கிறேன்.வருக. http://ponnibuddha.blogspot.com/2015/04/blog-post.html

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...