World Tamil Blog Aggregator Thendral: கவிதைகளால் இணைவோம்....24.08.14

Sunday 24 August 2014

கவிதைகளால் இணைவோம்....24.08.14

கவிதைகளால் இணைவோம்....24.08.14

நகர்மன்றத்தில்....காலை 10மணியளவில் துவங்கப்பட்டது...

கவிஞர் வைகறை அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு அழைத்த போது சாதாரணமாகத்தான் நினைத்தேன்..ஆனால் நிகழ்ச்சிக்கு நான் மிகவும் மதிக்கும்இயக்குநர். நந்தன் ஸ்ரீதரன் ,கவிஞர் யாழி ,கவிஞர் நாணற்காடன் மற்றும் பலரை சந்திக்க வைத்து நெகிழ்வில் ஆழ்த்தி விட்டார் கவிஞர்வைகறை..
நிகழ்வில் வாசிக்கப்பட்ட ஒவ்வொரு கவிதைக்கும் சரியான விமர்சனம் தந்து வியப்பில் ஆழ்த்தினார்..கவிஞர்.ஸ்ரீபதி...
கவிதைகள் கேட்க கேட்க செவிப்பசி தீரமறுத்தது.

குடும்ப நண்பர்கள் போல,நீண்ட நாள் பழகியவர்களாய், அனைவரும் இயல்பாய் பழகிய விதம் இனிமையாய் இருந்தது...

முகம் பாரா முகநூல் நட்பு இன்று முகம் கண்டு மகிழ்ந்தது....

பொள்ளாச்சி,கோவை,சிவகாசி,கடலூர்,சென்னை,என பல திசைகளிலிருந்தும் முகநூல் பறவைகள் கவிதை நீர் அருந்த வலசையாய் புதுகைக்கு வந்திருந்தனர்.கவிஞர் வைகறைக்கு மனம் நிறைந்த நன்றி...

இந்நிகழ்வு நடக்க ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி...
தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்....

3 comments :

  1. நிகழ்ச்சித்தொகுப்பு அருமை..

    ReplyDelete
  2. அருமையான தருணம் இது !
    வாழ்த்துக்கள் தோழி .

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...