Monday, 29 December 2025

கோடாங்கி

குறி சொல்லும் கோடாங்கி 
குமறி வரும் பசியைக்
குளிர்ந்த நீர்குடித்து
நடுசியில் வந்து குடுகுடுவென்க .
பல்லாண்டுகளாக மாற்றாத
செந்துணியோடு வந்து
குறி சொல்லும் ஓசை
ஓங்கி பின் மெலிந்தது.
காலையில் வந்து 
நல்லகாலம் பிறந்துடுச்சு 
வீட்டில் பெண் தெய்வம் 
நல்லது பண்ணுமென்றவனுக்கு 
செந்துணி புதுசா வாங்கிக்கன்னு 
பணத்தைக் கொடுத்தவளை 
வயிற்றில் கைவைத்து 
வணங்கியவனை 
உணவுவிடுதியில் கண்டால் 
நல்லகாலம் பிறக்கட்டுமென
வாழ்த்திடுங்கள்.

No comments:

Post a Comment

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...