Monday 18 April 2022

விதையாக

எங்கு வாழ்ந்தாலும் 
வேர்ஊன்றி வளரும்
விதையாக,
ஆதி விதை
 வாழ்ந்த இடம் நோக்கிப்
படரும் கொடியாக,
அன்பெனும் கனிசுமந்து
அள்ளித்தரும் மாரியாய்,
கருணை சுரந்து உயிர்களைக் 
காணும் விழிகளுக்கு
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"

1 comment:

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...