World Tamil Blog Aggregator Thendral: marumo...?மாறுமோ?

Thursday 11 June 2015

marumo...?மாறுமோ?

முகம் பார்க்காமால்
எங்கோ பார்க்கிறார்கள்
எப்போது பார்ப்பார்கள்
என்ற ஏக்கத்தை தூண்டியபடி

காரியம் இன்றி வருவார்களா
காத்திருக்கட்டும் கர்வத்துடன்
அதிக வேலை உள்ளது போல்
அலட்டிக்கொள்கின்றார்கள்

தப்பித்தவறி பார்த்திடும்
ஒரு நொடியிலும் அலட்சியத்தின்
மொத்தத்தை காட்டி

மனதில் எழும்பும் ஆதங்கம்
ஆங்காரமாய் மாறி
காறித்துப்ப முடியாது
கால்மாற்றி நிற்க

நமக்காக பணி செய்யவே
நாதாறிகளுக்கு பணி தந்துள்ளதை
 மறந்த அரசு அலுவலர்கள்....
மறைவிடமே நோக்கமாய்..

5 comments :

  1. வருத்தம் தரும் கவிதை
    தம +

    ReplyDelete
  2. உண்மை ஒன்றை முன்வைக்கும்
    படமும் பாவரிகளும் நன்று
    தொடருங்கள்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...